கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் கொண்ட பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இது நமது தமிழுக்கு கிடைத்த மிக பெரிய ஊக்கம். நம் தமிழ்க்கு அழிவில்லை என்பதற்கு உதாரணம்.
11 அக்
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) International Forum for Information Technology in Tamil (INFITT) தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை ஆயும், நியமங்களை பரிந்துரைக்கும் ஒரு தொண்டூழியர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் அரசாங்கங்கள் (தமிழ்நாடு-இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்), அனைத்துலக அமைப்புகள், மற்றும் பலநூறு தன்னாவலர்களை கொண்டிருக்கின்றது. இவ்வமைப்பு உத்யோகபூர்வமாக யூலை 24, 2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வமைப்பின் முக்கிய நிகழ்வாக தமிழ் இணைய மாநாடுகள் தொடர்ச்சியாக 2000 முதல் 2004 வரை நடைபெற்றன. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு 2009ம் ஆண்டு நடைபெற்றது.
11 அக்
நீதிநூல் காலம்
தமிழ் இலக்கியத்தில் கி.பி. 100 இருந்து கி.பி. 500 வரையிலான காலப்பகுதி நீதிநூல் காலம் எனப்படுகிறது. இந்தக் காலப் பகுதியை சங்கம் மருவிய காலம் என்றும் வகைப்படுத்துவர். இந்த காலப்பகுதில் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு என்ற 18 நூல்களின் தொகுப்பில் 12 நீதிநூல்கள் (மு. வரதராசன்). சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை இயற்றப்பட்டது இக்காலத்திலேயே.
நீதிநூல்கள்
* திருக்குறள்
* நாலடியார்
* நான்மணிக்கடிகை
* சிறுபஞ்சமூலம்
* திரிகடுகம்
* ஏலாதி
* இனியவை நாற்பது
* ஆசாரக்கோவை
* முதுமொழிக்காஞ்சி
* இன்னா நாற்பது
25 ஆக